பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), ஒடிசா கடற்கரைக்கு அப்பால் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவிலிருந்து, நீண்ட தூர தரைத் தாக்குதல் கிரூஸ் ஏவுகணையின் (LRLACM) விமானப் பரிசோதனையை ஜூன் 15, 2026 அன்று வெற்றிகரமாக நடத்தியது. சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் நிறுவப்பட்ட பல்வேறு கண்காணிப்புக் கருவிகள் மூலம் பெறப்பட்ட தரவுகளின்படி, சோதனையின் அனைத்து நோக்கங்களும் முழுமையாக நிறைவேற்றப்பட்டன.
LRLACM என்பது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒரு ஏவுகணையாகும். இதன் அனைத்து துணை அமைப்புகளும் பல்வேறு DRDO ஆய்வகங்கள் மற்றும் இந்தியத் தொழில் கூட்டாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. பெங்களூருவில் உள்ள வானூர்தியியல் மேம்பாட்டு நிறுவனம் இதன் ஒருங்கிணைப்பு ஆய்வகமாகச் செயல்படுகிறது. இந்த ஏவுகணை ஏவுதலை DRDO-வின் மூத்த அதிகாரிகளும், இந்தியக் கடற்படை மற்றும் விமானப்படையின் பயனர் பிரதிநிதிகளும் கண்டுகளித்தனர்.
பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், LRLACM-இன் வெற்றிகரமான விமானப் பரிசோதனைக்காக DRDO குழுவினரையும் தொழில் கூட்டாளர்களையும் வாழ்த்தினார். பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பாதுகாப்புத் துறை (ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு) செயலாளரும், DRDO தலைவருமான திரு ராஜேஷ் குமார் சிங், ஏவுதலின் போது அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்தார். வெற்றிகரமான விமானப் பரிசோதனையில்
எம்.பிரபாகரன்
