பிரதமரின் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணம்.

பிரதமர் திரு நரேந்திர மோடி ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு பயணம் மேற்கொண்டார். விமான நிலையத்தில் அவரை ஐக்கிய அரபு எமிரேடை்ஸ் அதிபர் திரு ஷேக் முகமது பின் சையீது அல் நஹியான்  வரவேற்றார்.

அதைத் தொடர்ந்து இருவரும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். நீடித்த அமைதி, ஸ்தரதன்மை, எரிசக்தி பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றை விரிவு செய்ய ஹோர்மூஸ் நீரிணை வழியாக தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய இந்தியா ஆதரவு வழங்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.

வர்த்தகம், முதலீடு, கல்வி, கலாச்சாரம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் விரிவான ஒத்துழைப்புக் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்தியா ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து இருதலைவர்களும் மகிழ்ச்சித் தெரிவித்தனர்.

கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உள்ளிட்டவற்றில் இருதரப்புக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு அவர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

தமக்கு வழங்கப்பட்ட வரவேற்புக்கும் விருந்தோம்பலுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் திரு ஷேக் முகமது பின் சையீது அல் நஹியானுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். இந்தியாவிற்கு வருகை தருமாறு அவருக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

Leave a Reply