பிரதமர் திரு நரேந்திர மோடி, நல்ல ஆரோக்கியம் என்பது வாழ்க்கையில் மிகப்பெரிய செல்வம் என்றும், அதைப் பராமரிப்பதில் உடற்பயிற்சி மிக முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் கூறியுள்ளார். நாட்டின் அனைத்து குடிமக்களும் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று அவர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பகிர்ந்துள்ளார்-
“व्यायामाल्लभते स्वास्थ्यं दीर्घायुष्यं बलं सुखम्। आरोग्यं परमं भाग्यं स्वास्थ्यं सर्वार्थसाधनम्॥”
நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், வலிமை மற்றும் மகிழ்ச்சியை உடற்பயிற்சி விளைவிக்கும் என்பதை சுபாஷிதம் தெரிவிக்கிறது. நல்ல ஆரோக்கியமே மிகப்பெரிய ஆசீர்வாதம். ஆரோக்கியம் என்பது எல்லாவற்றையும் குறிக்கிறது.
திவாஹர்
