ராஜஸ்தானின் ஜோத்பூரில் ‘ஸ்ரீ பரஸ்மல் போஹ்ரா பார்வையற்றோருக்கான கல்லூரி’ மற்றும் மாணவர்களுக்கான விடுதிக்கான கட்டிடத்திற்கு மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு. அமித் ஷா இன்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் ராஜஸ்தான் முதல்வர் திரு. பஜன்லால் சர்மா, மத்திய அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு. அமித் ஷா தனது உரையில், ஒருவர் தனது வாழ்க்கையை சேவைக்காக, குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைக்காக அர்ப்பணிக்கும்போது, அந்த வாழ்க்கை எண்ணற்ற மற்றவர்களை ஊக்குவிக்கிறது என்று கூறினார். மாற்றுத்திறனாளிகளுக்கு கடவுள் தனித்துவமான பலங்களை வழங்கியுள்ளார் என்றும், இந்த பலங்களை அங்கீகரிப்பதன் மூலம், அவர்களின் வாழ்க்கையை எளிமைப்படுத்தும் முயற்சியை சுசீலா ஜியின் வாழ்க்கை மூலம் ஆயிரக்கணக்கானோர் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
சுமார் ரூ.15 கோடி மதிப்புள்ள மூன்று திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டதாக திரு. அமித் ஷா தெரிவித்தார். நிறுவனத்தின் சாதனைப் பதிவின் அடிப்படையில், மூன்று திட்டங்களும் சரியான நேரத்தில் முடிக்கப்படும் என்றும், நூற்றுக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கையில் புதிய ஒளியைக் கொண்டு வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஐந்து பள்ளிகள், இரண்டு கல்லூரிகள், இலவச விடுதிகள், உணவு, ஆடியோ புத்தகங்கள், பதிவு செய்யப்பட்ட விரிவுரைகள், பிரெய்லி அச்சு இயந்திரம், திரை வாசகர்கள், கணினி ஆய்வகம் மற்றும் நூலகம் மூலம் நூற்றுக்கணக்கான பார்வை குறைபாடுள்ள மாணவர்களின் வாழ்க்கையில் சுசீலா ஜி அறிவு மற்றும் தொலைநோக்கு பார்வையின் ஒளியைப் பரப்பியுள்ளார் என்பதை அவர் எடுத்துரைத்தார்.
2022 ஆம் ஆண்டில் ராஜஸ்தானின் முதல் பார்வை குறைபாடுள்ளவர்களுக்கான கல்லூரியாக பரஸ்மல் போஹ்ரா பார்வை குறைபாடுள்ளவர்களுக்கான கல்லூரி உருவானதாக திரு அமித் ஷா கூறினார். மாற்றுத்திறனாளிகளுக்கான உண்மையான பணி, அவர்களை பரிதாபத்திற்குரிய பொருட்களாக அல்லாமல் தெய்வீகத்தின் சின்னங்களாகப் பார்க்கும்போது தொடங்குகிறது என்பதை அவர் வலியுறுத்தினார். 2015 ஆம் ஆண்டில் முழு நாட்டிற்கும் “ஊனமுற்றோர்” என்பதற்குப் பதிலாக “திவ்யாங்” என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியவர் பிரதமர் திரு நரேந்திர மோடி என்று அவர் குறிப்பிட்டார். பிரதமர் மோடியின் ஒரு முடிவு இந்திய மக்கள், அனைத்து மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் மீதான கண்ணோட்டத்தை மாற்றியுள்ளது என்பதை இந்த வார்த்தையே குறிக்கிறது என்று அவர் கூறினார். “திவ்யாங்” என்ற வார்த்தையின் மூலம் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளிடமும் பிரதமர் மோடி புதிய சுயமரியாதை, அடையாளம் மற்றும் தன்னம்பிக்கைக்கான விருப்பத்தை விதைத்துள்ளார் என்றும் அவர் கூறினார்.
திவாஹர்
