திரு ஜக்தீப் தன்கர் உடல் நலம் பெற வேண்டுமென்று பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டின் குடியரசு துணைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் நம் நாட்டிற்கு சேவையாற்ற பெரும் வாய்ப்புகளை திரு ஜக்தீப் தன்கர் பெற்றார் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
நாட்டின் குடியரசு துணைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் நம் நாட்டிற்கு சேவையாற்ற பெரும் வாய்ப்புகளை திரு ஜக்தீப் தன்கர் பெற்றார். அவர் உடல் நலம் பெற வாழ்த்துகள்.
திவாஹர்
