சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக ராஜேஷ் குமார் அகர்வால் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னையில் ஆளுநர் மாளிகையில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில், நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வாலுக்கு ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
