காதல் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்!-முழு விபரம்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்டிகோரெயான்ஸ் இவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஜெபினா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் இருவரும் திண்டுக்கல் YMR பட்டி காளியம்மன் கோவில் அருகே உள்ள மாடி வீட்டிற்கு வாடகைக்கு வந்துள்ளனர்.

இவர்களுடன் ஸ்டிகோரெயான்ஸ் தாயாரும் இருந்து வந்துள்ளார். இதனிடையே கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஸ்டிகோரெயான்ஸ் வேலை பார்த்து வந்துள்ளார். அடிக்கடி கணவன்-மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (11.04.2022) வழக்கம்போல் கணவன்- மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஸ்டிகோ ரெயான்ஸ் தனது காதல் மனைவியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளார். மனைவியை படுகொலை செய்த பயத்தில் தானும் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தலை மற்றும் கைகளில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் இறந்துபோன ஜெபினாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதல் திருமணம் செய்து ஒன்பது மாதங்களில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply