உளவு பார்க்கும் பறவைகள்!

narainarai1

உளவுபார்க்கும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நாரையொன்று  எகிப்தில் பிடிபட்டுள்ளது.

இந்த பறவையை பிடித்த நபர் கெயிரோவிற்கு தென்கிழக்கில் சுமார் 280 மைல்கள் தொலைவில் உள்ள கீனா என்ற பகுதியில் உள்ள பொலிஸ் நிலையமொன்றில் ஒப்படைத்துள்ளார்.

நாரையின் உடலின் மேற்பகுதியில் இலத்திரனியல் உபகரணமொன்று பொருத்தப்பட்டுள்ளமையால் இது உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபடும் பொருட்டு பயிற்றுவிக்கப்பட்டிருக்கலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பல சம்பவங்கள் பல நாடுகளில் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன. சவுதி அரேபியா, ஈரான் போன்ற நாடுகளில் உளவுபார்த்தாகக் கூறப்படும் கழுகுகள், புறாக்கள் என பல பறவைகள் உடலில் இலத்திரனியல் உபகரணங்களுடன் பிடிக்கப்பட்டிருந்தன. மேலும் இஸ்ரேல் இம்மாதிரியான உளவு பார்க்கும் நடவடிக்கைகளில் அடிக்கடி ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply