இலங்கை கடற்பரப்பில் 08 இந்திய மீனவர்கள் கைது!

indian fisherman aresst in sln.1 indian fisherman aresst in sln indian fisherman aresst in sln2

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 08 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் நேற்று (நவம்பர் 18) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 படகு மற்றும் மீன் பிடி உபகரணங்கள் அனைத்தும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு, அதன்பின் சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண உதவி கடற்தொழில் பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.