ஓமந்தூரார் அரசு மருத்துவமனை நுழைவு வாயிலின் கான்கிரீட் பகுதி திடீரென இடிந்து விழுந்த விபத்தில், தாய் மற்றும் 7 வயது சிறுமி படுகாயமடைந்தனர்.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தின் ஒரு பகுதியாக, தற்போதுள்ள நுழைவு வாயில் 2010-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. திமுக ஆட்சியின் போது புதிய தலைமைச் செயலகத்திற்காக இந்தக் கட்டடத் தொகுதி கட்டப்பட்டது. பின்னர், 2014-ஆம் ஆண்டில் செல்வி ஜெ ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இது அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது.
இந்நிலையில் இன்று அந்த நுழைவு வாயில் கான்கிரீட் இடிந்து விழுந்ததில் ஒரு சிறுமி உள்பட இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
-கே.பி.சுகுமார், B.E., ullatchithagaval@gmail.com
