காவிரி பாலத்தில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு ஓவியம்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் பாராளுமன்றப் பொதுத்தேர்தல்-2024 வருகின்ற 19. 04. 2024 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு இத்தேர்தலில் 18 வயது பூர்த்தியடைந்த ஒவ்வொரு வாக்காளர்களும் தங்களது ஜனநாயகக் கடமையினை ஆற்றிட வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான பிரதீப் குமார் அறிவுறுத்தலின்படி, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டம், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி, ரங்கோலி கோலம் வரைதல், வாகனங்கள் மற்றும்‌அதனடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம்
திருச்சிராப்பள்ளி காவிரி ஆற்றுப்பாலத்தில் பாராளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் தேர்தல் விழிப்புணர்வு வாசகம் மற்றும் ஓவியங்களை
பிரதீப் குமார் இன்று பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்து பார்வையிட்டார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply