தமிழகத்தில் மக்களவைக்கான தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் தேசிய, மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மக்களவை பொதுத்தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் வரும் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து, தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. தேர்தல் பணியாளர்களுக்கான அடுத்தகட்ட பயிற்சி நாளை (ஏப்.13) நடைபெறுகிறது.

அதேநேரத்தில், வாக்குப்பதி வுக்கு இன்னும் 7 நாட்களே இருப்பதாலும், அதில் 6 நாட்கள் மட்டுமே பிரச்சாரம் செய்ய முடியும் என்பதாலும், திமுக, அதிமுக, பாஜக கூட்டணிக் கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், காலையில் 6 மணிக்கு தொடங்கி, 10 மணிக்கு முன்னதாக பிரச்சாரத்தை நிறைவு செய்கின்றனர். பின்னர், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை தெருக்கள் வாரியாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

எஸ்.திவ்யா

Leave a Reply