தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் அவ்வபோது பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இன்று (06.06.2023) திருச்சி தெற்கு மாவட்ட மாணவரணி காட்டூர் பகுதி தலைமை சார்பாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகை புரிந்த கர்ப்பிணிப்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாணவரணி தலைவர் அருள் விஜய் தலைமையில் செயலாளர் R.பார்த்திபன், பகுதி தலைவர் S.ரஞ்சித், பகுதி செயலாளர் S.சதீஷ்குமார், பகுதி பொருளாளர் G.நாகரத்தினம், பகுதி துணைத்தலைவர் S.வசந்த், பகுதி நிர்வாகி N.முரளி மற்றும் மாவட்டம், நகரம், ஒன்றியம், பகுதி மற்றும் கிளை மன்ற நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கே.பி.சுகுமார்