சிங்கப்பூரில் தொழில் நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

சிங்கப்பூரில் தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடல் காற்றாலைகள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், உணவு பதப்படுத்தல் துறை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில் முதலீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

சிங்கப்பூர் நாட்டு தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்து தமிழகத்தில் தொழில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை கொண்டார். இதன்படி, Temasek, Sembcorp, CapitaLand ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு நிலவும் சாதகமான சூழ்நிலையை எடுத்துக்கூறி, தமிழகத்தில் தொழில் முதலீடுகள் செய்திட வேண்டுமென்று கோரிக்கை விடுத்து, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply