இந்தியாவின் 75 வகை கைத்தறிப் புடவைகளைக் கொண்டாடும் புடவைத் திருவிழாவின் இரண்டாம் கட்டமான “பாரம்பரியம் ”நாளை தொடங்குகிறது.

இந்தியாவின் 75 வகை கைத்தறிப் புடவைகளைக் கொண்டாடும் புடவைத் திருவிழாவின் இரண்டாவது கட்டமான  “பாரம்பரியம் ”விழா, நாளை முதல் 17ஆம் தேதி வரை புதுதில்லி ஜன்பத்தில் உள்ள ஹேண்ட்லூம் ஹாட்டில் தொடங்குகிறது.

மத்திய ஜவுளி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள  திருவிழா,  காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.

இரண்டாம் கட்டத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 90 பங்கேற்பாளர்கள், டை அண்ட் டை, சிக்கன் எம்பிராய்டரி புடவைகள், ஹேண்ட் பிளாக் புடவைகள், கலம்காரி பிரிண்டட் புடவைகள், அஜ்ரக், காந்தா, புல்காரி போன்ற புகழ்பெற்ற கைத்தறிப் புடவைகள்,  ஜம்தானி, இகாட், போச்சம்பள்ளி, பனாரஸ் ப்ரோகேட், டஸ்ஸர் சில்க் (சம்பா), பலுச்சாரி, பாகல்புரி சிக், தங்கைல், சாந்தேரி, லலித்புரி, படோலா, பைதானி போன்ற பிரத்யேக கைத்தறி புடவைகள் இதில் காட்சிப்படுத்தப்படுகின்றன.  மேலும் தஞ்சோய், ஜங்லா, கோட்டா டோரியா, கட்வொர்க், மகேஸ்வரி, பூஜோடி, சாந்திபுரி, போம்காய் மற்றும் கரட் கோரியல், கந்துவா மற்றும் அர்னி சில்க் புடவைகள் உள்ளிட்ட பல வகை புடவைகளும் இதில் கிடைக்கும்.

இந்தியாவின் 75 வகையான கைத்தறிப் புடவைகளைக் கொண்டாடும் முதல் கட்ட விழா 2022 டிசம்பர் 16 அன்று தொடங்கி 30  அன்று நிறைவடைந்தது. இந்த நிகழ்வை மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்தார்.

நமது கைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவாக #MySariMyPride என்ற பொதுவான ஹேஷ்டேக்கின் கீழ் ஒரு சமூக ஊடகப் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை ஒட்டி, 75 கைத்தறி நெசவாளர்களால் கைத்தறிப் புடவைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறும்.

இந்த விழாவில் தமிழகத்தின், காஞ்சிபுரம் பட்டுப் புடவை, ஆரணி பட்டுப் புடவைகள், திருபுவனம் பட்டுப் புடவைகள், விளந்தை காட்டன் புடவை, மதுரைப் புடவை, பரமக்குடி காட்டன் புடவை, அருப்புக்கோட்டை காட்டன் புடவை, திண்டுக்கல் காட்டன் புடவை, கோயம்புத்தூர் காட்டன் புடவை, சேலம் பட்டுப் புடவை மற்றும் கோவை (மென்மையான) பட்டுப் புடவைகள், கோவை கோரா காட்டன் புடவைகள்  இடம்பெறும்.

திவாஹர்

Leave a Reply