நாட்டில் பாதுகாப்புத் தளவாட பொருட்கள் ஏற்றுமதி நிலை குறித்து மத்திய அமைச்சர் அஜய் பட் பேச்சு.

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பாதுகாப்புத் தளவாட பொருட்கள் 75-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தற்போது ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. சில பாதுகாப்பு ரகசிய காரணங்களுக்காக அந்நாடுகள் குறித்த பட்டியலை வெளியிட இயலாது. கடந்த 2019-20-ம் ஆண்டில் ரூ.9116 கோடி அளவிற்கும், 2020-21-ம் ஆண்டில் ரூ.8435 கோடி அளவிற்கும், 2021-22-ம் ஆண்டு ரூ.12,815 கோடி அளவிற்கும், 2022-23 (இதுவரை) ரூ.6058 கோடி அளவிற்கும் பாதுகாப்புத் தளவாட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இத்தகவலை மாநிலங்களவையில் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட், உறுப்பினர் திரு சுஜீத் குமாருக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.

திவாஹர்

Leave a Reply