சேலம் பால் பண்ணை வளாகத்தில் ரூ.12.26 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்திறந்து வைத்தார்.

சேலம் பால் பண்ணை வளாகத்தில் 12.26 கோடி ரூபாய் செலவில் நாளொன்றுக்கு 6,000 லிட்டர் உற்பத்தித்  திறன் கொண்ட புதிய   ஐஸ்கிரீம்  தொழிற்சாலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். வளர்ந்து வரும் ஐஸ்கீரிம் சந்தையில் ஆவின் பங்களிப்பை அதிகப்படுத்தும் விதமாகவும், கூடுதல் லாபம் ஈட்டி பால் உற்பத்தியாளர்களின் நலன் பேணவும், சேலம் பால் பண்ணை வளாகத்தில் அதிநவீன தொழில் நுட்பத்தில் ஐஸ்கிரீம் தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது.

கே.பி.சுகுமார்

Leave a Reply