மத்திய அரசின் இந்தி வெறியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!-அனைவரும் அணிதிரண்டு வாரீர்!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அழைப்பு.

மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில், இந்தி எதிர்ப்புக் கண்டன ஆர்ப்பாட்டம், 06.10.2022 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

அமித்ஷாவின் இந்தி வெறிப் பேச்சுக்கு – போக்குக்குக் கண்டனம் தெரிவிக்கவும், அரசமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்திக்கு இணையான ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் 06.10.2022 வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு என்னுடைய தலைமையில் நடைபெற்ற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழ் உணர்வாளர்களும், கழகத் தோழர்களும் திரளாகக் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறேன்.

இவ்வாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

-சி.கார்த்திகேயன்.

Leave a Reply