‘உங்கள் துறையில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ், காவலர்களிடமிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

தமிழகத்தில் அமைதியை பேணிக்காத்து, சட்டம் ஒழுங்கை பராமரித்து வரும் காவல்துறையினரின் குறைகளை கண்டறியும் வகையில் உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், காவலர்களிடமிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

சென்னையில் உள்ள காவல்துறை தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.அதற்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் முதலமைச்சர உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சியில், சுற்றுச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக முதலமைச்சர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply