ஐந்து நாடுகளின் தூதர்கள் தங்களது நியமனங்களை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் அளித்தனர்.

இந்தியாவுக்கான தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ள சிரியா அரபு குடியரசு தூதர் டாக்டர் பாசாம் அல்கத்தீப், செக் குடியரசு தூதர் டாக்டர் எலிஸ்கா சிக்கோவா, காங்கோ குடியரசு தூதர் ரெயிமண்ட் செர்ஜி பாலே, நவ்ரு குடியரசு துணைத் தூதர் திருமதி மார்லன் இனம்வின் மோசஸ், சவுதி அரேபியா தூதர் சாலிஹ் ஈத் அல் –ஹூசைனி ஆகியோரின் நியமனங்களை குடியரசு தலைவர் மாளிகையில் இன்று (செப்டம்பர் 14. 2022) நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுகொண்டார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply