இலங்கை கடல் பகுதியில் சட்ட விரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக 04 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் (டிசம்பர் 20) கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து மீன்பிடிப் படகு ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர். கொரோனா நோய்த் தடுப்பு காரணமாக கைது செய்யப்பட்ட 04 இந்திய மீனவர்களையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தியுள்ளனர்.

ஏற்கனவே, ஐந்து இந்திய மீன்பிடிக் படகுகளுடன் 36 இந்திய மீனவர்களை, டிசம்பர் 15-ம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நமது இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி செல்லும் வரை, நமது இந்திய கடற்படையும், கடலோரக் காவல் படையும் அப்படி என்னதான் செய்துக் கொண்டிருக்கிறது?!

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply