ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அன்னிய முதலீடு பெற அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 21-ல் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து திஹார் சிறையில் அடைத்தனர். சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது.
ஆனால், அதே வழக்கில் பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் சிதம்பரத்தை கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமின் கோரி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா மற்றும் ஹரிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கில் இன்று ப.சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கியது.
இந்நிலையில், 106 நாட்களுக்கு பிறகு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிறையில் இருந்து வெளியில் வருகிறார்.
–டாக்டர் துரை பெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com