மதில்சுவர் இடிந்து 17 பேர் பலியான இடத்தை, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி நேரில் பார்வையிட்டார்!

கோவை மாவட்டம்மேட்டுப்பாளையத்தில் கனமழையால் மதில்சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 லட்சம், முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.6 லட்சம் என மொத்தம் ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

கனமழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிதாக வீடுகள் கட்டித்தரப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் தகுதியானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மதில்சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான நடூர் பகுதியில் ஓட்டு வீடுகளில் வசிக்கின்ற மக்களுக்கு தமிழக அரசின் குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் கட்டித் தரப்படும்.

பவானி ஆற்றங்கரையில் வசித்து வந்த சுமார் 300 பேருக்கு வீடுகள் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேட்டுப்பாளையம் துயரச் சம்பவத்தில், மதில் சுவரின் உரிமையாளர் மீது உரிய பிரிவுகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுகைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 -திவாஹர்.

 

Leave a Reply