51 கல்லூரிகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டியில் தேசிய கல்லூரி சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது.

sports

பாரதிதாசன் பல்கலைக்கழகம் இடையிலான மண்டல கிரிக்கெட் போட்டிகள் கடந்த செப்டம்பர் 4 முதல் 6 தேதி வரையில் திருச்சிராப்பள்ளி (தன்னாட்சி) தேசிய கல்லூரியில் நடைபெற்றது. இதில் 51 கல்லூரி அணிகளும்  4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. இன்று (06–09-2019) நடைபெற்ற இறுதிப்போட்டியில்  தேசிய கல்லூரி. தேசிய கல்லூரி அணி – சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது.  பிஷப் ஹெபர் கல்லூரி -2 வது இடமும், மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரி -3-வது இடமும், திருவாரூர் அரசு கலைக் கல்லூரி -4-வது இடமும் பெற்றன. திருச்சி தேசிய கல்லூரி வீரர் நிரஞ்சன் 2 சதம் மற்றும் 2 அரை சதம் அடித்தார். தேசிய கல்லூரி செயலாளர் ஸ்ரீ கே.ரகுநாதன் மற்றும் முதல்வர் டாக்டர் ஆர்.சுந்தரராமன் வீரர்களை வாழ்த்தினர்.

-கே.பி.சுகுமார்.

Leave a Reply