கோவைக்கு மெட்ரோ ரயில்!-கள்ளக்குறிச்சி தனி மாவட்டம்: தமிழக சட்ட பேரவையில் முதலமைச்சர் கே.பழனிச்சாமி தகவல்.

தமிழக சட்ட பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் கே.பழனிச்சாமி இன்று பதில் அளித்தார்.

அப்போது, கோவைக்கு மெட்ரோ ரயில் கொண்டு வருவது குறித்து திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது என்றும், மேலும், விழுப்புரம் பெரிய மாவட்டமாக இருப்பதால், கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்றும், விரைவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ஆட்சித் தலைவர் நியமிக்கப்படுவார் என்றும் தெரிவித்தார்.

-ஆர்.அனுசுயா.

 

              

 

 

Leave a Reply