நம்மாழ்வாரின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சேலம் மாவட்டம், ஏற்காட்டில் நாம் தமிழர் கட்சியினர் இலவசமாக மரக்கன்றுகளை விநியோகித்தனர். ஏற்காடு பஸ் நிலையத்தில் ஒன்றிய செயலாளர் தங்கதுரை தலைமையில் துவங்கிய நிகழ்வில், நம்மாழ்வார் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ஏற்காடு தொகுதி செயலாளர் மனோகரன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு நம்மாழ்வார் குறித்து பேசினார். ஏற்காடு தொகுதி தலைவர் ஜஸ்டின் செல்வநாதன் பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகளை வழங்கினார்.
ஏற்காடு வந்திருந்த சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் சென்று மரக்கன்றுகளை பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் மா, பலா, மாதுளை, இழுப்பை, நாவல், அரசு, கொய்யா உள்ளிட்ட 250 மரக்கன்றுகள் வினியோகிக்கப்பட்டது.
-நவீன் குமார்.
நம்மாழ்வார் நினைவு தினத்தையொட்டி மரக்கன்றுகள் விநியோகம்!
News
December 30, 2018 2:00 pm