ஏற்காட்டில் சட்டமன்ற உறுப்பினர் குழு ஆய்வு.

தமிழக சட்டப்பேரவையின் 2018 – 2019 ஆம் ஆண்டின் பொது நிறுவனக் குழுவின் தலைவரும், மேட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செம்மலை மற்றும் பவானி சாகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஆகியோர் சேலம் மாவட்டம், ஏற்காட்டில் இன்று மாலை ஆய்வு மேற்கொண்டனர். லேடீஸ் சீட் வியூ பாயின்ட்டில் ஆய்வு மேற்கொண்ட குழுவினர், அங்குள்ள வணிக வளாக கடை வியாபாரிகளிடம் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த வேண்டாம் என்றும், சுற்றுலா பயணிகள் வரும் இடம் என்பதால் உணவு பொருட்களை சுகாதாரமான முறையில் சமைத்து தர வேண்டும் என கூறினார்.மேலும் அவர்களிடம் தங்களுக்குள்ள குறைகள் குறித்த கேட்டபோது, பெண் ஒருவர் தண்ணீர் வசதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் உட்பட அனைவரும் சிரமப்படுவதாக கூறினார். உடனடியாக அதிகாரிகளிடம் விசாரித்த மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை ஒரு வாரத்திற்குள் தண்ணீர் வசதி செய்து தரப்படும் என உறுதியளித்து சென்றார். அப்போது ஏற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சித்ரா உடனிருந்தார்.

– நவீன் குமார்.

Leave a Reply