மலையிலிருந்து தவறி விழுந்த சிறுமியை உயிருடன் காப்பாற்றிய இலங்கை கடற்படை வீரர்கள்!

இலங்கை தெற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்திற்கு காலி துறைமுக போலிஸ் அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில், நேற்று 5.00 மணியளவில் ரம்சலா பகுதிக்கு சென்ற சிறப்பு படகு படை மற்றும் டைவிங் பிரிவின் கடற்படை வீரர்கள், அங்குள்ள போனிட்டா குழந்தைகள் இல்லத்தில் இருந்த சிறுமி ஒருவர் தற்செயலாக அருகிலிருந்த ஒரு மலையிலிருந்து எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்திருப்பது தெரியவந்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற கடற்படை வீரர்கள், மிகுந்த சிரமத்திற்கு இடையில் போராடி காயமடைந்த அச்சிறுமியை உயிருடன் காப்பாற்றி, சிகிச்சைக்காக காலி பிரதேசத்தில் உள்ள கராபிட்டிய மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply