திருச்சி எடமலைபட்டி புதூர் முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா!

திருச்சி, எடமலைபட்டி புதூர் முத்துமாரியம்மன் கோவிலில் “வைகாசி திருவிழா” இன்று நடைபெற்றது. இத்திருவிழாவை முன்னிட்டு கோரை ஆற்றிலிருந்து பக்தர்கள் பால் குடம் மற்றும் தீர்த்த குடம் எடுத்து வந்தனர். தங்கள் நேர்த்திக் கடனை நிவர்த்தி செய்யும் விதமாக, பல்வேறு விதமான அழகுகள் குத்தி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். அதனைத் தொடர்ந்து தீ மிதி நிகழ்ச்சியும், அன்னதானமும் நடைப்பெற்றது. இத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

-ப.ஜான்சி ராணி.

Leave a Reply