பயன்பாட்டுக்கு வராத நாகரம்பேடு கிராம ஊராட்சி பொது சேவை மையம்!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம், மேல் நாகரம்பேடு கிராமத்தில், மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சி பொது சேவை மையம் ரூ.14.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. ஆனால், இன்று வரை இந்த சேவை மையம் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டியே கிடக்கிறது.

இதனால் ஆதார் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்கள் செய்வதற்கும், மின் கட்டணம் கட்டுவதற்கும் வயதனாவர்கள் இங்கிருந்து 20 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டியுள்ளது.

எனவே, இந்த கிராம ஊராட்சி பொது சேவை மையத்திற்கு பணியாளர்களைத் தேர்வு செய்து செயல்படுத்தினால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

-ச.ரஜினிகாந்த்.

Leave a Reply