ஆற்று பாலத்திற்கு அடியில் நீரோட்டத்திற்கு இடையூறாக தேங்கி நிற்கும் மரக் கிளைகள் மற்றும் ஆக்கிரமிப்புக்களை அகற்றி சுத்தம் செய்யும் இலங்கை கடற்படையினர்!

sln sln1 sln2 sln3 sln4 sln5 sln6 ipp ipp

இலங்கை காலி ரத்கம சாலையில், ஜின் கங்கா மீது அமைந்துள்ள வக்வெல்ல பாலத்தின் கீழ் தேங்கி நிற்கும் மரக் கிளைகளால் குப்பைகள் தடுத்து நிறுத்தப்பட்டு, ஆற்றின் நீரோட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் மழைக்காலங்களில் அப்பகுதியில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.

இதைக்கருத்தில் கொண்டு வக்வெல்ல பாலத்தின் கீழ் தேங்கி நிற்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் இலங்கை கடற்படையினர் இன்று (29 டிசம்பர் 2017) ஈடுப்பட்டனர்.

-என்.வசந்த ராகவன்.