இலங்கை கடற்பரப்பில் 23 இந்திய மீனவர்கள் கைது!

indian fisherman8indian fisherman1

இலங்கை கடற்பரப்பில் டெல்ஃப்ட் தீவு பகுதிகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 23 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர்  (டிசம்பர்-11) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 3 படகு மற்றும் மீன் பிடி உபகரணங்கள் அனைத்தும் காரை நகர் கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு, அதன்பின் சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண உதவி கடற்தொழில் பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.