திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உரிமம் இல்லாமல் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
செங்கம் அருகே உள்ள ஆணைமங்கலம் பகுதியில் செங்கம் காவல் ஆய்வாளர் கர்ணன் மற்றும் போலீஸார் கீழ்ஆணைமங்கலம் வனப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாகச் சென்ற இரு இளைஞர்களை சந்தேகத்தின் பேரில், பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், முன்னுக்கு பின் முரணான பதிலைக் கூறவே, பொலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரனையில், அதே கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன்(22), ராஜசேகர் (25) என்பதும், அவர்கள் இருவரும் நாட்டுத் துப்பாக்கியைக் கொண்டு, காட்டு விலங்குகளை வேட்டையாடி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸார் அவர்கள் இருவரையும் கைது செய்து, நாட்டுத் துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்தனர்.
-செங்கம் சரவணக்குமார்.