சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்!

m.k.stalin5m.k.stalin2m.k.stalin3 m.k.stalin4m.k.stalin6 m.k.stalin

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.

m.k.stalin1

வடசென்னைக்கு உட்பட்ட கொடுங்கையூர், வியாசர்பாடி, ஓட்டேரி ஆகிய பகுதிகளில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவு, பால், போர்வை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.

m.k.stalin7

முன்னதாக கொடுங்கையூரில் உள்ள இடுகாட்டுக்கு சென்று, மின்கசிவு ஏற்பட்டு இறந்த இரு சிறுமிகளின் உடல்களுக்கு இறுதி மரியாதை செலுத்தி, அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

-ஆர்.அருண்கேசவன்.