இலங்கை கடற்படையினரால் 05 இந்திய மீனவர்கள் கைது!

indian fisherman2

indian fisherman

இலங்கை மன்னார் கலங்கரை விளக்கிற்கு சுமார் 11.5 கடல் மைல்கள் தூரத்தில், இலங்கை கடல் பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் 11.10.2017 அன்று இரவு கைது செய்துள்ளனர்.

இந்திய மீனவர்களிடமிருந்து ஒரு படகும் மற்றும் மீன் பிடி உபகரணங்களையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள், படகு மற்றும் மீன் பிடி உபகரணங்கள் அனைத்தையும் சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் கடற்தொழில்  பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.