இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்பு நிகழ்ச்சிக்கு ரூ. 6 ஆயிரம் மட்டுமே செலவு!

SRI LANKA PRESIDENT MAITHIRI

SRI LANKA PRESIDENT MAITHIRI.jpg1

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் 09.01.2015   மாலை பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்காக ரூ. 6 ஆயிரம் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. அதுவும், புதிய ஜனாதிபதியை வரவேற்பதற்காக பூக்கொத்து வாங்குவதற்கும், சுதந்திர சதுக்கத்துக்கான மின்சார கட்டணமும் செலுத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்ச்சி மிகவும் எளிமையாக நடைபெற்றது. இது நாட்டு மக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆடம்பரத்தையும், அராஜகத்தையும் பார்த்து வந்த இலங்கை மக்களுக்கு, புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கை, புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இது இறுதி வரை தொடர வேண்டும்.  அவர்  உலகத்திற்கே முன்மாதிரியாக திகழ வேண்டும். செய்வாரா? பொறுத்திருந்துப் பார்ப்போம்.

-எஸ்.சதிஸ்சர்மா.