இலங்கை ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பாதுக்காப்பு பணிகளில் இன்று காலை முதல் 65,000 போலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 420 போலிஸ் காவல் அரண்கள் நாடெங்கிலும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், ரோந்து நடவடிக்கைகளிலும் போலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அசம்பாவிதங்கள் இடம்பெறும் பட்சத்தில், உரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி, அசம்பாவங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட போலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
-எஸ்.சதிஸ் சர்மா.