அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ள, மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க தனி பெஞ்ச் அமைக்க வேண்டும் என கர்நாடகா உயர் நீதிமன்றத்திற்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, ஜெ.ஜெயலலிதாவின் வழக்கை விசாரிக்க தனி பெஞ்ச்சை அமைத்து, கர்நாடகா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலா இன்று உத்தரவிட்டுள்ளார்.
ஜெ.ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க, நீதிபதி சிக்கா ராசப்பா குமாரசாமியை நியமனம் செய்து, கர்நாடகா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இன்று உத்தரவிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவு படி, இன்னும் 4 மாதத்திற்குள் இவ்வழக்கு முடிவுக்கு வந்து விடும்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in