சிறப்பு மருத்துவ முகாம்!

ye2111P1

ye2111P3

ye2111P2

சேலம் மாவட்டம், ஏற்காடு தாலுக்காவில் உள்ள மஞ்சக்குட்டை பஞ்சாயத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைப்பெற்றது. முகாமில் கலந்துக் கொண்டவர்களுக்கு இரத்தப் பரிசோதனை, இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல பரிசோதனைகள் நடத்தப்பட்டது.

முகாமில் வாழவந்தி மற்றும் நாகலூர் ஆரம்ப சுகாதர நிலைய மருத்துவர்கள் உஷா, பிரபா, பிரசாத், சுரேஷ் பிரசன்னா, மற்றும் 14 லேப் டெக்னீசியன்கள், ஏற்காடு தாலுக்காவில் உள்ள துணை சுகாதர நிலையங்களின் செவிலியர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

முகாமில் குழந்தைகள் மற்றும் கர்பிணிகள் சாப்பிட வேண்டிய காய்கறிகள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்த முகாமில் ஏற்காட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் 736 கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். முகாமில் ஆங்கிலம் மற்றும் சித்தா முறைப்படி சோதனை நடத்தப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டது.

முகாமை ஏற்காடு யூனியன் சேர்மேன் அண்ணாதுரை மற்றும் மஞ்சக்குட்டை ஊராட்சி மன்ற தலைவர் சுப்ரமணி ஆகியோர் துவக்கி வைத்தனர். மேலும், ஏற்காடு யூனியன் பி.டி.ஓ.க்கள் ஜெயராமன், துளசிராமன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதர ஆய்வாளர் சண்முகம் செய்திருந்தார்.  

-நவீன் குமார்.