செங்கம் வட்டார வள மையத்தில் ஆங்கில இலக்கணப் பயிற்சி!

image 01 (1)திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் வட்டார வள மையத்தில் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு ஆங்கில இலக்கணப் பயிற்சி நடைபெற்றது.

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் நடந்த ஆங்கில இலக்கணப்  பயிற்சிக்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் கல்யாணசுந்தரம் தொடக்கி வைத்து பயிற்சியின் நோக்கம் குறித்தும், மாணவர்கள் பயன்படுத்தும் விதம் பற்றியும் கூறினார்.

இப்பயிற்சியை மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி பார்வையிட்டு மாணவர்களுக்கு வாசித்தல் மற்றும் எழுதுதல் திறன்களில் ஏற்படும் இடர்பாடுபளையும், அவற்றை களையும் வழிமுறைகளையும் விளக்கமாக எடுத்து கூறினார்.

இப்பயிற்சியில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலிருந்து செங்கம் ஒன்றியத்தில் 25 ஆசிரியர்களும், புதுபாளையம் ஒன்றியத்திலிருந்து 15 ஆசிரியரகளும் கலந்து கொண்டனர்.

பயிற்சியில் ஆசிரியர் பயிற்றுநர்கள் அண்ணாமலை, முருகன், பெரியசாமி, அன்புக்கரசி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

– செங்கம். மா.சரவணக்குமார்.