ஏற்காடு அண்ணா பூங்கா அருகே தேங்கி நிற்கும் மழை நீரால், கொசுக்களின் தொல்லை அதிகரித்து உள்ளது!

ye1010P2ஏற்காட்டில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்காட்டின் சில இடங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது.

இவ்வாறு ஏற்காட்டின் மிக முக்கியமான சுற்றுலா இடமான அண்ணா பூங்கா அருகில் கடந்த 10 நாட்களாகவே மழைநீர் தேங்கி நிற்கிறது. இங்கு தினமும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

இவ்வாறு மழை நீர் தேங்கி நிற்பதால் கொசுக்களின் தொல்லை அதிகரித்து உள்ளது. நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை ஏற்காடு ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கவனிக்குமா?

-நவீன் குமார்.