இலங்கையில் இரயில் விபத்து : 75-க்கும் மேற்பட்டோர் காயம், 5 பேர் உயிர் ஊசல்!

sl sl1 slfகொழும்பில் இருந்து வவுனியா நோக்கி சென்ற நகரங்களுக்கு இடையிலான சொகுசு ரயிலும், வவுனியாவில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரஜரட்ட என்ற ரயிலும் இன்று (30.04.2014) காலை 8.45 மணியளவில் குருநாகல் பொத்துஹெர ரயில் நிலையத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. காயமடைந்தவர்கள் அனைவரும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தில் 75-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும், அவர்களில் 5 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தெரிகிறது. சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.

ரயில் பெட்டிகள் 20 அடிவரையில் தூக்கி வீசப்பட்டுள்ளன. இரு எஞ்ஜின்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக வடபகுதிக்கான ரயில் சேவைகள் முற்றாக சீர்குலைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.