குடி நீர் தேவைக்காக காவிரி ஆற்றில் தண்ணீர் : காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி

Photo-0030 Photo-0027 Photo-0029
மழையில்லாததாலும், வெயிலின் கொடுமையாலும் காவிரி ஆறு தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் இருந்தது. மக்கள் குளிப்பதற்கும், கால்நடைகள் குடிப்பதற்கும் கூட காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லை. இதனால் மக்கள் விரக்தியில் இருந்தனர்.

இதனை அறிந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா, மக்களின் அத்யாவசிய பிரச்சனையான குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்க உத்தரவிட்டார். பாலைவனமாக காணப்பட்ட காவிரி ஆற்றில் மக்கள் குளிப்பதற்கும், கால்நடைகள் குடிப்பதற்கும் தேவையான தண்ணீர் தற்போது வந்து கொண்டிருக்கிறது. பங்குனி உத்திர திருவிழாவையும், சித்திரை தமிழ் புத்தாண்டையும் விமர்சையாக கொண்டாடும் காவிரி கரையோர மாவட்ட மக்கள் இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

– டாக்டர்.துரைபெஞ்சமின்.