இருநாட்டு மீனவப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் சுமூக நிலை

pr270114a1இந்திய- இலங்கை மீனவ பிரதிநிதிகளிடையே இன்று (27.01.2014) காலை சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இருநாட்டு பிரதிநிதிகளும் கூட்டாக பேட்டி அளித்தனர்.

இருநாட்டு மீனவப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் சுமூக நிலை ஏற்பட்டுள்ளது. இதில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அது இரண்டு நாட்டு அரசுகளின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அதன்பின் இறுதி முடிவு எடுக்கப்படும்.

கச்சத்தீவு பிரச்சினை இரு நாட்டு அரசு சம்பந்தப்பட்டது. அதற்கு இருநாட்டு அரசுகளும்தான் முடிவு காண வேண்டும். இந்திய மீனவர்களுக்கு சில தடைகள் உள்ளது. அதேபோல் இலங்கை மீனவர்களுக்கும் சில தடைகள் உள்ளது. இது பற்றி பேசியுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.