இலங்கை சிறைச்சாலையில் கூரையின் மீதேறி கைதிகள் உண்ணாவிரதம்!

prison_இலங்கை சிறைச்சாலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர் கூரையின் மீதேறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திர ரத்ன பல்லேகம தெரிவித்தார்.

தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை இரத்து செய்யுமாறு வலியுறுத்தி இந்த கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். கண்டி,போகம்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 450 கைதிகள் மட்டுமே தற்போது இந்த சிறைச்சாலையில் இருப்பதாகவும், ஏனையோர் வேறு சிறைச்சாலைகளில் தடுத்து வைத்திருப்பதாகவும், அங்கிருந்து 250 கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இந்த விடயமும் கைதிகளின் உண்ணாவிரததத்திற்கு காரணதாக இருக்கலாம் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.