புதுவருட கொண்டாட்ட தினத்தை முன்னிட்டு கொழும்பு ஹில்டன் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விசேட பிரமுகர்களின் மேடை சரிந்து விழுந்தது. இதில் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தினால் ஹில்டன் ஹோட்டலில் எல்லா இடங்களிலும் இரத்தம் சிந்திக்கிடந்தது. நேற்றிரவு நடத்தப்பட்ட புதுவருட விருந்து உபசாரத்தின் போது இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இந்த விருத்து உபசாரத்தில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ஷேவின் மகனும், இன்னும் பல முக்கிய பிரமுகர்களும் அமர்ந்திருந்த மேடை இவ்வாறு உடைந்து வீழ்ந்துள்ளது. இதனால் கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்த பலர் காயமடைந்தனர்.
இந்த மேடையில் சுமார் 200 பேர் வரையிலும் இருந்ததாக கொழும்பு ஹில்டன் ஹோட்டல் நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.