ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு எதிராக பாகிஸ்தான் வாக்கினை பிரயோகித்திருந்தது. இதற்கு நன்றி தெரிவித்துக் கொண்ட மகிந்த ராஜபட்சே, பாகிஸ்தான் அரசாங்கம், இலங்கைக்கு முக்கியமான தருணங்களில் உதவியாக இருந்திருப்பதாக மகிந்த ராஜபட்சே தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்துள்ள பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஜிலால் அபாஸ் ஜிலானியுடனான சந்திப்பின் போது மகிந்த ராஜபட்சே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.