அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்குக்கு, தமிழகத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக ஆளுநர் மாளிகையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் சந்தித்து பேசினார்.
அப்போது திருவள்ளுவரின் திருஉருவப்படத்தை மலேசிய பிரதமருக்கு, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பரிசாக வழங்கினார்.
மலேசியா பிரதமர் நஜிப் ரஜாக் வருகையையொட்டி, தமிழக ஆளுநர் மாளிகை வண்ண விளக்குகளால் அலகரிக்கப்பட்டிருந்தது.
