தமிழகத்தில் 16 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில், சென்னை காவல்துறை நிர்வாக ஐ.ஜி.யாக ஆர். தினகரன் பதவி உயர்வு பெற்றுள்ளார். வித்யா ஜெயந்த்குல்கரனி காவல்துறை தலைமையக ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை உளவுத் துறை ஐ.ஜி.யாக ஈஸ்வரமூர்த்தி நியமிக்கப்படுள்ளார்.
கரூர் காகித நிறுவன கண்காணிப்பு ஐ.ஜி.யாக சந்திரசேகர் பதவி உயர்வு பெற்றுள்ளார். ஓம்பிரகாஷ் மீனா சென்னை குற்றவியல் பிரிவு ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாநகர காவல் ஆணையராக அருண் பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார். தென்காசி ஏ.எஸ்.பி ஷாஷாங் சாய் சென்னை பூக்கடை துணை ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி ஐ.ஜி. மஞ்சுநாதா தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக லஞ்ச ஒழிப்பு ஏ.டி.ஜி.பி.யாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை ஐ.ஜி.யாக இருந்த அமரேஷ் புஜாரி மனித உரிமை ஏ.டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆவின் ஐ.ஜி.யாக இருந்த ரவி ஏ.டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயந்த் முரளி தமிழ்நாடு போக்குவரத்து திட்டக் குழு ஏ.டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
