முப்படைகளின் தலைமை அலுவலகச் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவுடன் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கலந்துரையாடல் பதவி உயர்வு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசனை.

மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இன்று (30.08.2026) முப்படைகளின் தலைமை அலுவலகச் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவுடன் கலந்துரையாடல் நடத்தினார். இக்கலந்துரையாடலின்போது, ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் பணி சார்ந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பிரதிநிதிகள் குழு அமைச்சரிடம் கோரிக்கை மனு ஒன்றைச் சமர்ப்பித்ததுடன், பணி முன்னேற்றம், பதவி உயர்வுகள் மற்றும் நிலுவையில் உள்ள குறைகள் தொடர்பான விஷயங்கள் குறித்து விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டது. இந்தக் கலந்துரையாடலில், பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளை அமைச்சரிடம் எடுத்துரைத்து, ஆக்கப்பூர்வமான மற்றும் நேர்மறையான சூழலில் பிரச்சினைகளை விவாதித்தனர்.

ஊழியர்களின் பிரச்சினைகளைக் கட்டமைக்கப்பட்ட முறையில் விவாதிக்க முன்வந்த தூதுக்குழுவினரை டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டினார். குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், மேம்பட்ட நிர்வாகத் திறனை உறுதி செய்வதற்கும் ஊழியர் பிரதிநிதிகளுடன் தொடர்ச்சியான, ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை மேற்கொள்வது முக்கியமானது என்று அவர் கூறினார்.

அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளும் முறையீடுகளும், சம்பந்தப்பட்ட துறைகளுடன் கலந்தாலோசித்து முழுமையாகப் பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார். மேலும், ஊழியர்களின் நலனுக்காகத் தன்னால் இயன்ற சிறந்த முயற்சிகளை மேற்கொள்வதாகவும், எழுப்பப்பட்ட பிரச்சினைகள் உரிய நிர்வாகச் செயல்முறைகளின் மூலம் பரிசீலிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஊழியர்கள் தொடர்பான விவகாரங்களுக்கு உரிய கவனம் செலுத்தியதற்காக, மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கிற்கு முப்படைகளின் தலைமை அலுவலகச் சங்கப் பிரதிநிதிகள் தங்களது பாராட்டைத் தெரிவித்தனர்.

Leave a Reply